அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Monday 30 March 2015

Payment of Salary and other Personal Payments, Salary by Cash on optional basis or through Cheque / Electronically through Bank – instructions


Payment of Salary and other Personal Payments, Salary by Cash on optional basis or through Cheque / Electronically through Bank – instructions



No. 2-1/2007-08/PA (Tech-I) D-813-897

GOVERNMENT OF INDIA
MINISTRY OF COMMUNICATION & IT
DEPARTMENT OF POSTS
PA WING: TECH-I BRANCH
DAK BHAVAN: SANSAD MARG
NEW DELHI-110001
Dated:11-12-2014

OFFICE MEMORANDUM

Sub : Payment of Salary and other Personal Payments, Salary by Cash on optional basis or through Cheque / Electronically through Bank – instructions regarding.

In continuation of this Directorate O.M. of even No. D-482-558 dated 11.07.2007 wherein clarificatory Orders for disbursement of salary to the staff through POSB Accounts were issued and further O.M. of even No.D-255-326 dated 14.05.2009 wherein decision of Director General (Posts) for disbursement of Pay and Allowances to all employees of Department of Posts through cheque and/or through direct credit to the Salary/Savings Accounts of the employees concerned was conveyed for implementation in letter and spirit.

2. Further, another O.M. of even No. D-473-524 dated 03.10.2012 was issued, wherein decision of DG (Posts) was conveyed that payments of Salary and other personal payments including Retirement/Terminal benefits to all employees of Department of Posts mandatorily be made through Bank including POSB electronically by issuing payment advices with immediate effect. However, in special and exceptional cases, payment of Pay and Allowances including other personal payments to the employees can be made through cheque only with the prior approval of Head of Office/Divisional Head/Head of Postal Accounts office.

3. The case has been carefully re-examined in the light of provisions contained in Ministry of Finance, Gazette Notification dated 30.03.2012 and Department of Expenditure, Controller General of Accounts OM. F. No. 1(1 )/20ll/TA/292 &303 dated 31.03.2012 & 11.04.2012 and it has been decided by DG (Posts), that hence forth, all Government Servants of Department of Posts are permitted to receive their Salary by direct credit to their Bank Accounts or in Cash or by Cheque, at their ‘option’ and payments other than Salary like HBA above Rs. 25000/- and all payments towards settlement of Retirement/Terminal benefits such as Gratuity, Commuted value of Pension, Encashment of Leave Salary, CGEGIS, withdrawal from General Provident fund, etc. by issue of payment advices, including electronically signed payment advices, Cheque / POSB Account or Bank Account.

4. All concerned are requested to issue suitable instructions to all Drawing and Disbursing Authorities working under their administrative jurisdiction for strict compliance.

5. The receipt of this OM may kindly be acknowledged to Sh. Naresh Kumar, Asstt. Chief Accounts Officer (PEA), Room No. 412, Dak Bhavan, New Delhi – 110001

/Sd/-
(Rajnish Kumar)
DDG(PAF)

Download Department of Posts Office Memorandum No. 2-1/2007-08/PA (Tech-I) D-813-897 dated 11.12.2014

Saturday 28 March 2015

30 வது அகில இந்திய மாநாடு

 அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்சங்கம் -குரூப்-C -ன்  30 வது அகில இந்திய மாநாடு 04.06.2015 முதல் 07.06.2015 வரை உத்திரபிரதேசம் லக்னோ நகரில் நடை பெறவுள்ளது  . மாநாட்டில் கலந்து கொள்ள   விரும்பும்  தோழர்கள் 01.04.2015 -ற்கு முன்பாக கோட்ட செயலரை தொடர்பு கொள்ளவும். 

குமரிக்கோட்டத்தில் 26-03-2015 வேலை நிறுத்தப்போராட்டம் மாபெரும் வெற்றி


வழக்கம்போல நமது கோட்டத்தில் பெரும்பான்மையான அஞ்சல் அலுவலகங்கள் மூடியிருந்தன. ஒருசில அலுவலகங்கள் மட்டுமே பெயரளவில் திறந்து வைக்கப்பட்டிருந்தன. விரல்விட்டு எண்ணத்தக்க அளவிலான ஊழியர்கள் மட்டுமே பணியிலிருந்தனர். எத்தகைய போராட்டங்கள் என்றாலும் குமரிக்கோட்டம் முன்னிலை வகிக்கும் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து  ஊழியர்களுக்கும் கோ ட்ட சங்கத்தின் நன்றியினையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

போராட்ட வாழ்த்துக்களுடன் ,
P. ஜஸ்டின் ஜோஸ்                     S ஐயம்பெருமாள்                         A சுரேஷ்குமார்
கோட்ட தலைவர்                    கோட்ட நிதிசெயலர்                     கோட்ட செயலர்

LATEST POSITION ON OUR STRIKE DEMANDS AND THE MINUTES OF THE CONCILIATION MEETING HELD BEFORE ALC (CENTRAL) ON 27.03.2015 FORENOON

அன்புத் தோழர்களுக்கு வணக்கம் ! 

இன்று (27.03.2015) காலை மத்திய  தொழிலாளர் நல உதவி ஆணையர் முன் கூடிய  மாநில அஞ்சல் நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தையின்  முடிவில்  அளிக்கப்பட  MINUTES  நகல்  மற்றும் தொழிலாளர்  நல உதவி  ஆணையரிடம் அளிக்கப்பட்ட உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய சில  முக்கிய   கோரிக்கைகள்  பட்டியல்  கீழே  தரப்பட்டுள்ளது.  

அந்தப் பட்டியலில் உள்ள பிரச்சினைகளை  உடனடியாக தீர்த்திடுமாறு  நிர்வாகத்திற்கு மத்திய தொழிலாளர் நல உதவி ஆணையர் அறிவுறுத் தினார். நிர்வாகத்தரப்பில் கலந்துகொண்ட உதவி இயக்குனர்  இந்தப்  பிரச்சினைகள் மீது தீர்வு வேண்டி உடனடியாக CPMG  யின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்று உறுதி அளித்தார். CPMG  உடனான நேரடி  இரு தரப்பு  பேச்சு வார்த்தை , ஏற்கனவே  மாநில நிர்வாகத்தால்  உறுதி அளித்தபடி 10.04.2015 க்குள் நடத்தப்படும் என்றும்  தெரிவித்தார். பிரச்சினை களின் தீர்வில்  நிச்சயம்  முன்னேற்றம்  அளிக்கப்படும் என்றும்  நிர்வாகத்  தரப்பின் சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. கூட்டம் சுமார் 01.30 மணியளவில் முடிவுற்றது .  





Friday 27 March 2015

RPLI PREMIUM AND SERVICE TAX CALCULATOR FOR ANDROID MOBILE


RPLI Premium And Service Tax Calculator For Android Mobile

Calculate Premium amount of RPLI, AEA/W/GY or Children policy and also its service tax using android app.

Download Mobile Application


Download
Source : http://potools.blogspot.in

TOTAL STRIKE BY ALL 9 NFPE UNIONS THROUGHOUT TAMILNADU CIRCLE ON 26.03.2015

TOTAL STRIKE BY ALL 9 NFPE UNIONS THROUGHOUT TAMILNADU CIRCLE ON 26.03.2015

--------------------------------------------------------------------------------------------------------------------------
கொம்பு இருப்பதை மறந்தும்  வண்டி இழுக்கும் மாடுகளாய் ;
குவித்த செந்நெல்  விளைத்த கரங்கள் 
தமதென்று அறிந்திருந்தும்  கும்பிட்டுக் கூழைகளாய் ;
விதி வழி இதுவென்று மதிகேடாய் நடைப்பிணமாய் 
எத்தனை நாள் என் தோழா ? வந்த வழி திரும்பிப்பார் ! 
கண்ட களம் தெரியும் பார் ! கொண்ட வெற்றி புரியும் பார் !
சிங்கமென சிலிர்த்து  எழு !  உன் துன்ப விலங்குகள் தூளாகும் ! 
--------------------------------------------------------------------------------------------------------

பேசிப் பார்த்தோம் ; கேட்டுப் பார்த்தோம் ;
எழுதிப்  பார்த்தோம்  ; SUBJECTS  கொடுத்தோம் ;
அகில இந்திய சங்கத்திற்கு எடுத்துச் சென்றோம் ;
ஆர்ப்பாட்டம் செய்தோம் ;  தார்ணா  இருந்தோம் ;
NOTICE  போட்டோம்  ;  போஸ்டர் போட்டோம் :
வேலை நிறுத்த நோட்டீஸ் அளித்தோம் ;
கோரிக்கை மனு கொடுத்தோம் ;

தொழிலாளர் நல ஆணையர் முன் சென்றோம் ;
அங்கேயும்  அவர்கள் வரவில்லை ;
மீண்டும் மீண்டும்  அழைத்தும் வரவில்லை  ;
இத்தனை செய்தும் கேளாச் செவியினராய் 
ஒரு மாநில நிர்வாகம் ; அதன் அங்கங்களாய் 
எத்தனை  எத்தனை அதிகாரிகள் ;
எங்களுக்கு TARGET  தான் முக்கியம் ;
அடுத்த மாதம் பார்த்துக் கொள்ளலாம் 
என்று  அலட்சியமாய் ஒரு கடிதம்  ;

எந்த TARGET  லும் தமிழகமே முதலிடம் ;
CBS  MIGRATION  தமிழகம்  முதலில் ;
CIS  MIGRATION தமிழகம் முதலில் ;
முதல் ATM  தமிழகத்தில்தானே ?
SSA  கணக்கு  பிரதமரின் PILOT  PROJECT 
ஒரு கோடி கணக்குகள்  ஒரு மாதத்தில் வேண்டும் 
இதிலும் தமிழகம்  முதலிடம்  ;

கடந்த 23.03.2015 FINACLE  இல் எடுக்கப் பட்ட கணக்கு 
பிரதம அமைச்சரின் குஜராத்தில்  541
மேற்கு வங்கத்தில்     340
ஓடிஷா வில் 1201
கர்நாடகாவில் 688
தமிழ்நாடு  3349
பிரதம அமைச்சரின் குஜராத்தில் ஞாயிறு  அலுவலகம் 
திறக்க வில்லை என்பதே  செய்தி ;
விளைத்த கரங்கள் எவருடையவை ? 
தோழர்கள்  சிந்திய வியர்வை எவ்வளவு   ?
எடுத்துச் சொல்ல  வார்த்தை உண்டா ?

இத்தனை செய்தும்  தொழிலாளி யின் உரிமைகள் 
மறுக்கப் படுகின்றனவே  !

தொழிலாளியின்  கோரிக்கைகள் கேட்கப் படாததால் 
உரத்துச் சொல்லவே  ஆர்ப்பாட்டம்  ! தார்ணா  !
உண்ணாவிரதம்  எல்லாம் ; அந்த  குரல் கூட 
மறுக்கப்படுகிறதே ; குரல்வளைகள் நெரிக்கப்படுகின்றனவே !

திறக்கப் படுகின்ற  ஞாயிறுகளுக்குப் பதில் 
இருக்கின்ற நாளில்  வேலை நிறுத்தம் வேண்டாம்  என்று கூறி 
பேச்சு வார்த்தை நடத்திடுவோம்  என்று  இறங்கிவர 
மனமே  இல்லை  ;  தொழிலாளி  என்ன அடிமை இயந்திரமா ?

வேலை நிறுத்தம் விரும்பி ஏற்றதல்ல ; 
வேலை நிறுத்தத்தில் தள்ளியது நிர்வாகம் ;
இது  முடிவல்ல  ! ஆரம்பம் ! தொழிலாளி போர் ஆயுதம் பூண்டு விட்டான்  !
உரிமை கேட்டு போர்  !  உழைக்கும் தொழிலாளி யின் 
உணர்வுகள் மதிக்கப்பட  போர்  !

CORPORATE  கம்பெனி களில்  கூட சனி , ஞாயிறு விடுமுறை உண்டு  !
MODEL  EMPLOYER  ஆன மத்திய அரசுத்துறையில் 
தொடர்ந்து ஞாயிறுகளில்  வேலை நாள்  ! அப்பட்டமான  அரசியல் அமைப்புச் சட்ட மீறல் ! மனித உரிமை மீறல் !
UNFAIR  LABOUR PRACTICE  என்று  தொழிலாளர் நல 
ஆணையரே  பதிவு செய்யும் அவலம்  ;

இதுவா நிர்வாகம் ; இதுவா அரசாங்கம்  ?
நடத்துபவர்கள்  இந்தியர்கள் தானே  ?
அவர்களுக்கு இந்திய  அரசியல் அமைப்பு சட்டங்கள்  
தொழிலாளர் நல சட்டங்கள் செல்லாதா ?
ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு 
அந்த மாறுதலை செய்வதற்கு  நல்ல நாள் இன்று  !

தமிழகமெங்கும்  வெற்றி  ! வெற்றி !  வேலை நிறுத்தம் வெற்றி  !
என்ற சங்கநாதம்  முழங்கப் படுகிறது  !
இந்த வேலை நிறுத்தம்  ஒரு வரலாற்றுப் பதிவு !
இந்த வேலை நிறுத்தம்  தமிழகத்தின் ஓர்  எழுச்சி  !
ஒன்று படுவோம்  !   போராடுவோம் !

Wednesday 25 March 2015

வெல்லட்டும் 26.03.2015 வேலை நிறுத்தம் வெல்லட்டும்


அன்பார்ந்த தோழர்களே !

                தமிழகத்தில் .குறிப்பாக தென் மண்டலத்தில் அதிகாரவர்க்கம் தன் இஷ்டம் போல் உத்தரவுகளை போடுவதுவாடிக்கையாகவும்    .அதை அமுல்படுத்தாத  அதிகாரிகளுக்கு தனி கடிதம் எழுதி மிரட்டுவது என்பதில் ஆரம்பித்து இன்று உச்ச கட்டமாக எந்த மேல் முறையீட்டு மனுக்களுக்கும் நியாயமான முடிவுகளை வழங்காமல் ஊழியர்களை வதைப்பதில் தனி சுகம் அடைந்து வருகிறது .குறிப்பாக 

* டெலிவரி PERFORMANCE சரியில்லை என்று சொல்லி SPM தோழர்களை மண்டல அலுவலகத்திற்கு வர சொல்லி காலை முதல் மாலை வரை வெட்டியாக காக்க வைத்து விட்டு அனுப்புவது -இந்த கலாசாரமும் மதுரையில் தான் முதலில் தொடங்கியது .
* கோட்ட /மண்டல அலுவலகத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களை சனிக்கிழமைகளில் கட்டாயமாக வரவழைத்து ,வரவழைத்து இன்று சனிக்கிழமை என்பதை இழந்து தவிக்கும் ஊழியர்கள் 
*Rule 16 வழக்கில் அப்பில் செய்யாவிட்டாலும் தானாக ரிவி வ் செய்து தண்டனைகள் அதிகரித்து மகிழுவதும் மதுரையில் தான் .
      
               மதுரையில் கெடுபிடிகள் அதிகரிக்க ,அதிகரிக்க கோட்ட அலுவலகத்திலும் கெடுபிடிகள் அதிகரிக்க தொடங்கின .எதற்கு எடுத்தாலும் விளக்க கடிதம் ,ஷோ காஷ் நோட்டீஸ் கொடுப்பது .ஆய்வுக்கு செல்லும் இடங்களில் ஊழியர்களை ஏக வசனத்தில் திட்டி தீர்ப்பது .எத்தனை மணி என்றாலும் CBS அலுவலகத்தில் எட்டி பார்க்க மறுக்கும் கோட்ட நிர்வாகம் 

 PMG /DPS   REVIEW  மீட்டிங்கில் SSP /SP களை  வறுத்து எடுப்பதும் .அதே வேகத்தில் கோட்டத்திற்கு வந்து  SSP /SP கள் நமது ஊழியர்களை வாட்டி வதைக்கும் நிலையும் நீங்க வேண்டும்  

       இரண்டு எஜமானுக்கு ஒருவன் வேலை செய்ய முடியாது ,அப்படி செய்தால் ஒருவனை பற்றி கொண்டு ஒருவனை அசட்டை செய்வான் இது பைபிள் வாசகம் --அனால் CBS அலுவலகத்தில் பல எஜமானுக்கு கீழ் நாம் பணியாற்ற வேண்டிய அவல நிலை 

இந்த கொடுமைகளில் இருந்து விடுபட தோழர்களே ! வேலை நிறுத்தத்தை வெற்றி பெற செய்வோம் 

 

TN NFPE COC INTENSIFYING THE ONE DAY STRIKE THROUGH OUT TAMILNADU CIRCLE ON 26.03.2015

அநீதி கண்டு வெகுண்டெழுந்து ஆர்ப்பரித்துப்  போராடாது  
அநீதி களைய முடியாது !
வெல்லட்டும் !  வெல்லட்டும் ! 
தமிழகம் தழுவிய NFPE  சங்கங்களின் 
26.03.2015 ஒரு நாள் வேலை நிறுத்தம் வெல்லட்டும் !

Monday 23 March 2015

SUCCESS TO THE EFFORTS OF TN NFPE COC ! SUCCESS TO TN P3 CIRCLE UNION !

தமிழக என். எப்.பி .இ . இணைப்புக் குழுவின் வெற்றி  ! 
தமிழக  அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் வெற்றி ! !

அன்புத் தோழர்களே ! அஞ்சல் மூன்று மாநிலச் சங்கத்தின் 17.03.2015 கடிதத்தையும்  நமது மதிப்புக்குரிய  CPMG  அவர்களின் 20.03.2015 தேதியிட்ட  உத்திரவின் நகலையும்   நன்கு படித்துப் பார்க்கவும் ! 

15 ஆண்டு கால  போராட்டத்திற்கு  தற்போது  நமது  வேலை நிறுத்த போராட்டத்தால் கிடைத்த  வெற்றிதான் இது !  

மாநில அலுவலகம்  மற்றும் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் நீண்ட வருடங்களாக DEPUTATION  என்ற பெயரில்   இருந்து வரும் ஊழியர்கள்  அவர்களது சொந்த கோட்டங்களுக்கே  திரும்ப அனுப்பப் படுவார்கள் என்ற உத்திரவே  இது !  

நம் தமிழ் மாநில அஞ்சல் மூன்று செயலரின் கோரிக்கையை ஏற்று  உத்திரவிட்டுள்ள  CPMG  உயர்திரு. M .S . ராமானுஜன் IP o S  அவர்களுக்கு  மீண்டும்  நன்றி !  இதர கோரிக்கைகளிலும்  நாம்  உறுதியான வெற்றியைப் பெற  வேலை நிறுத்தத்தை தீவிரப் படுத்துங்கள் !


Friday 13 March 2015

No proposal under consideration of the Government to curtail the public holidays for government employees

No Curtailing of Public Holidays

As per the existing policy, the Central Government Administrative Offices observe up to 17 holidays in a year on specified occasions which consist of 3 National Holidays (on 26th January, 15th August and 2nd October) and 14 other holidays to celebrate festivals of different regions/religion in a diverse country like India.

At present there is no proposal under consideration of the Government to curtail the public holidays for government employees.

This was stated by the Minister of State for Personnel, Public Grievances and Pensions and Minister of State in Prime Minister’s office Dr. Jitendra Singh in a written reply to a question by Shri S. Thangavelu in the Rajya Sabha today.

Source : PIB News

Friday 6 March 2015

FURTHER VICTORY TO P 3/ GDS CIRCLE UNIONS AGITATIONAL PROGRAMMES IN TN CIRCLE

FURTHER VICTORY TO P 3/ GDS CIRCLE UNIONS AGITATIONAL PROGRAMMES IN TN CIRCLE

நமது அஞ்சல் மூன்று மற்றும் GDS  மாநிலச் சங்கங்களின் போராட்டத்திற்கு  மேலும் கிடைத்து வரும்  வெற்றிகள் !

அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம் ! ஏற்கனவே  நம்முடைய  இரண்டு கட்ட போராட்டத்தின் விளைவாக  நாம் வைத்திட்ட கோரிக்கைகளில் 

1) நீண்ட காலமாக தேங்கிக் கிடந்த  நேரடி எழுத்தர் தேர்வு முடிவுகள் கடந்த 18.02.2015 அன்றே அறிவிக்கப்பட்டன என்பதை  முதல் வெற்றியாக தெரிவித்திருந்தோம்.

2) இரண்டாவதாக  ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில் சென்னை பெருநகரத்தில் தாம்பரம் , தி . நகர்( மத்திய கோட்டம் ) , அண்ணா நகர் 
(வட கோட்டம் ) , விருகம்பாக்கம் ( தென் கோட்டம் ) உள்ளிட்ட இடங்களில் நடப்பில் இருந்த  துரித அஞ்சல் பட்டுவாடா  உத்திரவு அடியோடு ரத்து செய்யப்பட்டது. இதனால் நம்முடைய அஞ்சல் மூன்று தோழர்கள்  விடுமுறை  தினங்களை முழுமையாக பெறலாம் என்பது மிகப் பெரிய வெற்றி. இதேபோல  தென் மண்டலத்திலும்  8 அஞ்சலகங்களில்  இந்த உத்திரவு அமலில் உள்ளது.  அதனையும் நிச்சயம் ரத்து செய்து உத்திரவு பெறுவோம் . 

3) மூன்றாவதாக  CIS ( McCAMISH )  பிரச்சினைகளை தீர்க்காமல்  கண்மூடித்தனமான  FURTHER  MIGRATION நிறுத்தப் படவேண்டும் என்று கோரியிருந்தோம். தற்போது கடந்த 2.03.2015 இல் உத்திரவிடப்பட்ட 17 தலைமை அஞ்சலகங்களில் 8இல்  உடன் நிறுத்தச் சொல்லியும்  அடுத்த MIGRATION எதுவும் செய்திடாமல் உடன் நிறுத்திடவும்  உத்திரவிடப் பட்டுள்ளது.  இது நமது போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.

4) நான்காவதாக  கண்மூடித்தனமாக ரூ. 10/- RD கணக்குகள் போடச் சொல்லுவது , போலி  RPLI  பாலிசிகள்  போடச் சொல்வதை உடன் நிறுத்தச் சொல்லியும் , "எந்தவித தவறான வழிகளையும் பிரயோகிக்கக் கூடாது அப்படிப் பிரயோகித்தால்  பொறுத்துக் கொள்ளமுடியாது " என்றும்  CPMG  தமிழ்நாடு அவர்கள்  உத்திரவிட்டுள்ளார் . இந்த உத்திரவு  பாதிக்கப்பட்ட  அப்பாவி  ஊழியர்களுக்கு, குறிப்பாக  GDS  ஊழியர்களுக்கு  மிகப்பெரும்  பாதுகாப்பினைத் தரும் . இந்த உத்திரவின் நகலை கீழே  பார்க்கலாம். இதையும் மீறி எந்த குட்டி அதிகாரியாவது  மிரட்டி போலி பாலிசி போடச் சொன்னாலோ  அல்லது  போலி RD ACCOUNT  குறைந்த DENOMINATION இல் நூற்றுக் கணக்கில் போடச் சொன்னாலோ அந்த அதிகாரியின் பெயர் குறிப்பிட்டு உடன்  மாநிலச் செயலர்களுக்கும்  பொதுச் செயலருக்கும் எழுத்து மூலம் புகார் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.  அவர் மீது உடன்  CPMG , SECRETARY  POST  மற்றும் FINANCE  MINISTRY  வரை  நாங்கள் புகார் செய்து மேல் நடவடிக்கை எடுக்க வைக்கிறோம் .

5) ஐந்தாவதாக ,  தேர்வு செய்யப் பட்ட அனைத்து நேரடி எழுத்தர்களையும் உடனடியாக தாற்காலிக (PROVISIONAL ) பணி  நியமனம் செய்யுமாறு CPMG  அவர்கள்,   எழுத்தர் நியமன அடிப்படை சட்டவிதிகளை RELAX செய்து  உத்திரவிட்டுள்ளார்கள். அதாவது அவர்களிடம் இருந்து UNDER TAKING DECLARATION  பெற்றுக் கொண்டு  CERTIFICATE  VERIFICATION  செய்யாமலேயே , சாதிச் சான்று  VERIFICATION செய்யாமலேயே, MEDICAL  CERTIFICATE  பெறாமலேயே ,  POLICE  VERIFICATION  பெறாமலேயே  அவர்களுக்கு  தாற்காலிகப்  பணி  நியமனம் அளித்திடும் உத்திரவே  இது. ஏற்கனவே  நமது மத்திய சங்கத்தின் மூலம்  TRAINING  செல்லாமல் அனைத்து VERIFICATION  முடிக்கப்பட்டால் பணி  நியமனம்  அளிக்கலாம் என்ற உத்திரவை நாம் பெற்றிருந்தாலும்  தற்போது CPMG  , TN  அவர்கள் அளித்துள்ள  உத்திரவு  ஆட்பற்றாக்குறையை வெகுவாகத் தீர்த்திட  உதவும்,  உடனடி  நியமனத்திற்கான உத்திரவாகும். இது  நமது   தமிழ் மாநில  அஞ்சல் மூன்று  சங்கத்தின்  இரண்டு கட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்.  உத்திரவின் நகலை கீழே பார்க்கவும்.  இந்த செய்திகளை உடன் நகல் எடுத்து அனைத்து ஊழியர்களுக்கும்   அளிக்கவும்.

தொடர்ந்து  சுற்றிக்கை மூலமாகவும், SAVINGRAM  மூலமாகவும்,  தொடர் கடிதங்கள் மூலமாகவும்  அஞ்சல் மூன்று வலைத்தளத்தின் மூலமாகவும், அகில இந்திய சங்கத்திற்கு  இடைவிடாமல்  பிரச்சினைகளை எடுத்துச் செல்வதன் மூலமாகவும்  தமிழக அஞ்சல் மூன்று சங்கம்   நிர்வாகத்தின்  கவனத்திற்கு   பிரச்சினைகளை கொண்டு சென்ற போதும் தீர்க்கப்படாத  பிரச்சினைகள் , 

தற்போது  நூற்றுக் கணக்கான  ஊழியர்களின் ஒன்று பட்ட குரல் மூலம் ஓங்கி  ஒலிக்கத் துவங்கியவுடன்தான்  நிர்வாகத்தின் காதுகளுக்கு நம் பிரச்சினைகள் செல்லத்துவங்கியுள்ளன. இப்போதாவது கேட்கத் துவங்கியுள்ளதே  என்று  சற்று  நிம்மதி அடைகிறோம். ஆனாலும் நம்முடைய பெரும்பகுதி பிரச்சினைகள்  இன்னமும் தீரவில்லை. இது தொடக்கமே !

LSG  பிரச்சினையில்  மாநில நிர்வாகம் கேட்டிருந்த விளக்கம்  DTE  மூலம் அனுப்பப் பட்டுள்ளதாகவும்  உடன் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என்று 
நம்முடைய அஞ்சல் மூன்றின் பொதுச் செயலர் தோழர். N .S . அவர்கள் இன்று தொலைபேசியில் தெரிவித்தார்.   இது குறித்து நாளை  மாநில நிர்வாகத்திடம் பேசிட உள்ளோம். 

மூன்று ஆண்டுகளாக  அளிக்கப் படாத  LSG  பதவி  உயர்வு உடன் அளிக்கப் பட வேண்டும்  என்பதும் அதுவும்   நிர்வாகத்தின் காலதாமதம் என்பதால்  NOTIONAL  ஆக  அளிக்கப்பட வேண்டும் என்பதும்  நமது கோரிக்கை.HSGI  அலுவலகங்களுக்கு   பணித்  தகுதி உள்ள ஊழியர்கள் இல்லை யென்றால்  REVISED  HSG  I  பணி  நியமன விதிகளின்படி  HSG  I  பதவிகளை DOWNGRADE செய்யாமலேயே   உரிய ஊழியரைக் கொண்டு  HSG  II LEVEL  இல்  OPERATE  செய்திட வேண்டும் என்பதாகும். அப்படிச் செய்தால் எல்லா  HSG  I  பதவிகளும்   உடன் நிரப்பப்படும். இதனை  மாநில அஞ்சல் நிர்வாகம்  கருத்தில் கொண்டு உடன் உத்திரவு இட வேண்டுகிறோம்.

நாளை (05.03.2015) மாலை   தமிழக NFPE    COC  யின் கூட்டம்  எழும்பூர் RMS  மனமகிழ் மன்றத்தில் நடைபெற  உள்ளது  அதில் நிச்சயம் இணைந்த போராட்டத்திற்கு  முடிவு  எடுக்கப்படுமென்று   நம்புகிறோம் .  தேங்கிக் கிடக்கும் பிரச்சினைகளைத் தீர்த்திட  போராட்டம் தான்  வழி என்று நிர்வாகம் நம்மை தள்ளியுள்ளது.   போராட்டத்திற்குப் பின்னர்தான்  இந்த தீர்வுகள் கிடைக்கத் துவங்கியுள்ளன  !    

தீர்மானித்தபடி அடுத்த கட்டத்தை நோக்கி  ஒன்றுபட்டு  இயக்கத்தை எடுத்துச் செல்வதில் அஞ்சல் மூன்று  சங்கம்  முன்கை  எடுத்து  நிச்சயம்  செயல்படும். ஒற்றுமையே  வெற்றி !

        வாழ்க  NFPE  !  வளர்க  நம்   ஒற்றுமை !  வெல்க நம் போராட்டம் !

                                                          தோழமையுடன் 
 J . இராமமூர்த்தி,                                                                                              R . தனராஜ் ,
மாநிலச் செயலர், அஞ்சல் மூன்று                                மாநிலச் செயலர் , GDS 

Wednesday 4 March 2015

அததான்யா நாங்க மோதலேயே சொன்னோம் ...

THIS IS THE ORDER OF 'CBS ' IN TAMIL NADU. WHETHER THE AUTHORITIES KNOWINGLY ADMITTING THE 'MALADY' ?

மொதல்ல இப்படிதாங்க சொன்னாங்க ....................
Image result for vadivelu comedy images

Respected Sir/Madam,
Final step of DC closure is running. It  is expected to be completed by  17.30hrs......DC closure status can be viewed in EODMON at label "DC status" . On completion of DC closure , SOLs can commence  HSCOD
Request to communicate all the SOL's under your Region please.
Circle Processing Centre(CBS),
Tamilnadu Circle,
Contact No 044-28295964,65.


இத நம்பி நாங்களும் இருந்தோம் ...........
அப்புறம் சொன்னாங்க .....................



Image result for vadivelu comedy imagesvadivelu comedy images க்கான பட முடிவு

Respected Sir/Madam,
Final step of DC closure is not yet completed.
Expected time of completion, is not known.
Further update will be sent by 18.30hrs
Circle Processing Centre(CBS),
Tamilnadu Circle,
Contact No 044-28295964,65.
சரி ஆகட்டும்னு விட்டுட்டோம் 

vadivelu comedy images க்கான பட முடிவு


கடைசில ..மணி எட்டே முக்காலுக்கு ...சொல்றாங்க ..

vadivelu comedy images க்கான பட முடிவு

Sir

We have been directed  by the competent authority to convey the following instructions on EOD for 03.03.15
 All Sos's are hereby requested to clear all the blocking validations and to leave for the day. Kindly inform All the divisional SPOC's to give a consolidated report of their concerned offices regarding NIL report on BLOCKING VALIDATIONS to their Regional office and in turn RO will communicate to CPC on the same.
 EOD for today (03.03.2014) - HSCOD for all the offices will be executed centrally from CPC. Those offices who have not finished entering the transactions in FINACLE due to connectivity issues may complete the transactions if finacle connectivity is available..

Circle Processing Centre(CBS),
Tamilnadu Circle,
Contact No 044-28295964,65.

Image result for vadivelu comedy images


அததான்யா நாங்க மோதலேயே சொன்னோம் ...
போயிட்டு  நாளைக்கு வரோம்னு ......
கேட்டீங்களா ........