அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Monday 23 June 2014

அஞ்சல் மூன்று கோட்டச் சங்க செயற்குழு கூட்டம்

NFPE KANNIYAKUMARI

நமது அஞ்சல் மூன்று கோட்டச் சங்க செயற்குழு கூட்டம் கோட்டத்  தலைவர் தோழர் 
ஜஸ்டின் ஜோஸ் அவர்கள் தலைமையில் 22-06-2014 மாலை 3 மணிக்கு நாகர்கோவில் 
தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. பெருவாரியான செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு விவாதத்தில் பங்கேற்றனர். கோட்டத்தின் தற்போதைய நிலை குறித்து 
மிகுந்த கவலை தெரிவித்த உறுப்பினர்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். 

சுழல் மாறுதல்களில் மூத்த ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களைதல் ,

சுழல் மாறுதல் உத்தரவில் நிரப்பப்படாமல் விடப்பட்ட  காலி இடங்களை உடனடியாக நிரப்புதல்

 CBS -க்கு மாற்றப்படுவதற்கு முன்னர் அனைத்து அலுவலகங்களுக்கும் உயரிய தொழில் நுட்பங்கள் கொண்ட கணினிகள் , அச்சு எந்திரங்கள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்கப்படவேண்டும். 

அனைத்து அலுவலகங்களில் உள்ள UPS, GENERATOR  மற்றும் அனைத்து மின் சாதனங்களும் முறையாக பழுது நீக்கப்படவேண்டும்   அல்லது புதிய மின் உபகரணங்கள் வழங்கப்படவேண்டும். 

ஊழியர்களுக்கு விடுப்பு மறுக்கப்படுவது , விடுப்பு கொடுப்பதில் பாரபட்சம் காட்டுவது உடனடியாக நிறுத்தப்படவேண்டும் 

உட்பட பல்வேறு கோரிக்கைகள் செயற்குழு உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டது. ஊழியர்களின் அனைத்து கோரிக்கைகளும் கோட்ட நிர்வாகத்திடம் உரிய முறையில் கொண்டுசென்று தீர்வு  காணப்படும் என்று கோட்டச்  செயலர் தோழர் சுரேஷ்குமார் அவர்கள் உறுதிமொழி வழங்கினார். 

கோட்ட  பொருளாளர் தோழர் வைத்தீஸ்வரன் அவர்களின் நன்றி உரையுடன்  செயற்குழு கூட்டம் இனிதே நிறைவடைந்தது .

No comments:

Post a Comment