அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Monday 25 August 2014

அஞ்சல் மூன்றின் அகில இந்திய பொது செயலராக தோழர் N .சுப்ரமணியன் ( திருப்பூர் ,தமிழ்நாடு ) அவர்கள் தேர்வு

                          அன்புத் தோழர்களுக்கு இனிய வணக்கம். 

கடந்த 22.08.2014 முதல் 24.08.2014 வரை ஆந்திர மாநிலம்  ஓங்கோல் 
நகரில்  நமது அகில இந்திய அஞ்சல் மூன்று சங்கத்தின் மத்திய 
செயற்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 
நமது அகில இந்திய பொதுச் செயலர் தோழர்.M.கிருஷ்ணன்  அவர்கள்  எதிர்வரும் 31.08.2014 அன்று அரசுப் பணி  நிறைவு 
பெறுவதால் , நமது அகில இந்திய சங்கத்தின் துணைப் பொதுச் 
செயலராக தற்போது பணியாற்றி வரும்   

தமிழகத்தைச் சேர்ந்த நமது அன்புக்குரிய 
தோழர். N .S .என்று  அனைவராலும் 
அன்போடு அழைக்கப் படும் 
தோழர். N . சுப்பிரமணியன் அவர்கள்  


ந மது அகில இந்திய சங்கத்தின் பொறுப்புப்  பொதுச் செயலராக 

ஏகமனதாக அறிவிக்கப் பட்டார் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். திறமையானவர். அறிவாற்றல் மிக்கவர்.  நிச்சயம் 
இவரது காலத்தில்  நமது அகில இந்திய சங்கப் பணி  மேலும் 
மெருகேறும் என்பதில்  ஐயமில்லை.      
                                                              வாழ்த்துகளுடன் 
                                                              கோட்ட செயலர் 

No comments:

Post a Comment