அனைவருக்கும் இதயம் கனிந்த குடியரசு தின நல்வாழ்த்துக்கள்

Tuesday 3 March 2015

குமரிக்கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு 01-03-2015

குமரிக்கோட்ட அஞ்சல் மூன்று மாநாடு  01-03-2015 ஞயிறு  அன்று நாகர்கோயில் தலைமை அஞ்சலகத்தில் வெகு  விமரிசையாக   நடைபெற்றது. கோட்டத்தலைவர் தோழர் P . ஜஸ்டின் ஜோஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் நமது கோட்ட  முன்னாள்  தலைவர்களும்  நமது தொழிற்சங்க வழிகாட்டிகளுமான தோழர்
 BALM  ஆனந்தராஜ்  மற்றும்   தோழர்  S பகவதிபெருமாள்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நமது அன்பிற்குரிய நெல்லைக் கோட்ட  செயலர் தோழர் S  K ஜேக்கப்ராஜ் மிகச் சிறப்பானதொரு எழுச்சி உரையாற்றினார்.
நமது பாசத்திற்குரிய மாநிலச் செயலர் தோழர் J  இராமமூர்த்தி  அவர்கள் 
பல்வேறு புள்ளிவிவரங்களுடன் மிகச் சிறந்ததொரு சிறப்புரையாற்றினார். குமரிக் கோட்ட அஞ்சல் நான்கின் தலைவர் தோழர் G வர்கீஸ் அவர்களும்  குமரிக் கோட்ட ஊரக  அஞ்சல் ஊழியர் சங்கத்  தலைவர் தோழர் V  சுகுமாரன் அவர்களும் செயலர் தோழர் A  இஸ்மாயில் அவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  மாநாட்டில் கோட்டத்  தலைவராக தோழர் P  ஜஸ்டின் ஜோஸ் அவர்களும் செயலராக தோழர் S  சுரேஷ்குமார் அவர்களும் பொருளாளராக தோழர் S ஐயம்பெருமாள் அவர்களும் மற்றும் அனைத்து நிர்வாகிகளும் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில் பங்கேற்று வெற்றிகரமாக நடந்தேற உதவிய அனைத்து தோழர் தோழியருக்கும்  கோட்டச்  சங்கத்தின்  வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம் 
மாநாட்டு வாழ்த்துக்களுடன் ,

P ஜஸ்டின் ஜோஸ்                                                                      A  சுரேஷ்குமார்
கோட்டத்  தலைவர்                                                                    கோட்டச் செயலர்.

No comments:

Post a Comment